கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய 33 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொலிஸார் முயற்சிக்கின்றமைக்கு எதிராகவே, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.