மாடறுப்பு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு சட்டமாகும் வரையும், மாநகர, பிரதேச சபைகளின் சட்டங்கள் திருத்தப்படும் வரையும் மாடறுப்பு தொடர்பில் எவ்வித தடைகளும் மேற்கொள்ளாது முன்னர் இருந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாடறுப்புக்கு தடை விதிக்கும் வகையில் அண்மையில் மாகாண சபைகள், உள்ளாட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கு எதிராக இன்று கொழும்பு மாநகர சபையில் உறுப்பினர் ஷரப்தீன் அவர்களினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.