Our Feeds


Saturday, July 10, 2021

www.shortnews.lk

காத்தான்குடியில் கைக்குண்டு: STF அழைக்கப்பட்டு உடனடியாக மீட்ப்பு

 



(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று (09) வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றில் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று கைக்குண்டை சோதனையிட்ட பின்னர் விசேட அதிரடிப்படையினரின் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கைக்குண்டை வெடிக்க வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »