Our Feeds


Monday, July 26, 2021

www.shortnews.lk

PCR எடுத்த தாதியை பீங்கானால் தாக்கிய பிக்கு கைது.

 



தாதிய உத்தியோகத்தர் ஒருவரை பீங்கான் கோப்பையால் தலையில் தாக்கிக் காயப்படுத்திய பிக்கு ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் கொரேனா பிரிவில் கடமையாற்றும் தாதியொருவரே மேற்குறிப்பிட்ட தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.  

அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,  மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும்  கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பத்மினி அபேரத்ன தெரிவித்தார்.

பீ.சி.ஆர் பரிசோதனையின் போது ஏற்பட்ட வலியின் காரணமாக பரிசோதனை செய்த தாதியை குறித்த பிக்கு தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »