எதிர்வரும் திங்கட்கிழமை (26) ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அதிபர்-ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரையில் சரியான தீர்மானம் வழங்காத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.