பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றமை பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற சபைக்கு பொலிஸார் தகவல்களை வழங்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.