(நூருல் ஹுதா உமர்)
இன்று (28) கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில் அகில அகில இலங்கை மக்கள் காங்கிரஸி ன் சார்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தலைவருக்கு எதிரான அநீதிகளை பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்பதையும் தாண்டி யார் யாரெல்லாம் தலைவருக்கு துன்பம் விளைவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களினால் தலைவரின் இன்றைய நிலைக்கு எதிராக ஒரு உரையை கூட நிகழ்த்த முடியாமல், கண்டனத்தை கூட வெளியிட முடியாமல் இருப்பது கவலையளிக்கிறது. இப்படியான நிலை எங்களின் எதிரிகளுக்கும் வரக் கூடாது என இறைவனை பிரார்த்திக்கிறேன். எதிரிகளை விட துரோகிகள் கொடுமையானவர்கள் என்பதை அவர்கள் எங்களுக்கு இப்போது காட்டியுள்ளார்கள்.
சட்டம் ஒழுங்கு செய்ய வேண்டிய வேலையை செய்து கொண்டிருக்கும்போது அரசியல் ஆதாயம் தேடி வீதியில் கூப்பாடு போடும் மலையக மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் மனதில் இவ்வளவு காலமும் வைத்திருந்த கசடை இப்போது வெளியிறக்கியுள்ளனர்.
ஒரு சகோதரனுக்கு அநீதி நடைபெறுவதை பார்த்துக்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் மௌனம் காத்திருக்கும் இந்த வேளையில் இறைவனை நாங்கள் துணைக்கு அழைத்துள்ளோம்.
இந்த பிரச்சினைகளுக்கு பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்க்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் இறைவன் இருக்கிறான் என்பதையும் இறைவன் நீதியானவன் என்பதையும் தூரோகிகளும், எதிரிகளும் விரைவில் அறிவார்கள் என்றார்.