தனிமைப்படுத்தலிலிருந்து இரண்டு பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேல் கிராமசேவகர் பிரிவு இன்று (15) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தளம் ஜே.பி வீதியின் 9 ஆம் குறுக்கு பாதை பகுதியில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.