இன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் பிரதேசமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட தாபனே கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.