நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
பல்வேறு கோணங்களில் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 3 பேர் தற்போது பொரளை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரிஷாட் பதியுததீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஷாலினியின் இறப்பிற்கு நீதி கோரியும் இவ்வாறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.