ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவினல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜோவினல் மோயிஸின் (Jovenel Moise) வீட்டில் இன்று புதன்கிழமை காலை ஆயுதபாணிகள் குழுவொன்றினால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என இடைக்கால பிரதமர் கிளோட் ஜோசப் அறிவித்துள்ளார். தற்போது தானே ஹெய்ட்டி நாட்டுக்கு பொறுப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.