Our Feeds


Saturday, July 31, 2021

www.shortnews.lk

BREAKING: நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ், இரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

 



நாளை (1) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இவ்வாறு போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள்,  அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த 14 ஆம்திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது. 

எனினும், கொவிட் பரவல் நிலைமைய கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம்திகதி முதல் நாளை (1) வரை குறித்த சேவைகளை இடைநிறுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள் முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளை மறு தினம் (2) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக இராஜாங்க அமைச்சர் எமது செய்திப் பிரிவுக்கு தெரவித்திருந்தார்.

எனினும், தற்போது நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »