கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுளளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரம் ஏற்றக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.