கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் 15 பேரும் பொத்துவிலில் 13 பேரும் சம்மாந்துறையில் 11 பேரும் ஏனைய பிரதேசங்களில் 10க்கும் குறைந்த கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கல்முனைப் பிராந்தியத்துக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.