நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,661ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் 50 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் கூறுகின்றது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் கொவிட் தொற்றினால் 50 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை, மீண்டும் கொவிட் தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.