Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

BREAKING: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - கடற்படை மருத்துவமனையின் இருதயநோய் விசேட வைத்தியர் அதிரடி கைது.

 



கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதுச் சிறுமி இணையம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் குறித்த சம்பவத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இருதய நோய் நிபுணர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெலிசரா கடற்படை மருத்துவமனையில் பணிபுரியும் இருதயநோய் நிபுணராவார். மேலும், அவர் லெப்டினன்ட் கமாண்டர் பதவியில் பணியாற்றி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதற்காக 15,000 ரூபாய் வீதம் 30,000 ரூபாய் செலவிட்டுள்ளார்.

பானந்துறையில் உள்ள பண்டாரகம பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறப்பு மருத்துவர் மற்றும் பிற நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். (TC)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »