Our Feeds


Monday, July 5, 2021

www.shortnews.lk

BREAKING: 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - மாலைதீவின் முன்னால் அமைச்சர் ஒருவரும் கைது.

 



15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் முகமட் அஸ்மலி கைது செய்யப்பட்டுள்ளார்.


15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த சிறுமியின் தாயார் உட்பட 32 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (04) மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரில் மாலைத்தீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த சந்தேக நபர்களுக்கு அறை வழங்கிய ஹோட்டலின் முகாமையார் ஒருவர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இணையதளம் ஒன்றை நடத்திச் சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


(தமிழன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »