(எஸ்.அஷ்ரப்கான்)
பொத்துவில் கடலில் காணாமல்போன மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலை கடற்பகுதியில் மீட்கப்பட்டு நேற்று (11) இரவு பொத்துவிலை வந்தடைந்தனர்.
காணாமல்போன இந்த மீனவர்கள் திருக்கோணமலை கடற்பகுதியிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் திருகோணமலையேச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்படகு ஒன்றின் உரிமையாளர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பொத்துவிலை வந்தடைந்தனர்.