Our Feeds


Friday, July 2, 2021

www.shortnews.lk

BREAKING: 03 ஆயிரம் பாடசாலைகளை முதல் கட்டமாக ஜூலை மாதத்தில் திறப்பதற்கு முடிவு - கல்வி அமைச்சு

 



100 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதாரத் பிரிவின் முழு பரிந்துரைகளுக்கு இணங்க ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



கல்வி அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது கட்டாயமாகும் என ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டினுள் 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1,439 பாடசாலைகளும், 51-100 மாணவர்களை கொண்ட 1,523 பாடசாலைகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் குறித்த பாடசாலைகளை ஆரம்பித்து பின்னர் ஏனைய பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »