Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

BREAKING: 02 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: சிரிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய சிறை - அனுராதபுரம் நீதிமன்றம் அதிரடி

 



அக்கா, தங்கையான 15 மற்றும் 12 வயதான சிறுமிகள் இருவரையும் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவ்விரு சிறுமிகளின் சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


பிரதிவாதியான சிறிய தந்தையின் மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளும் எவ்விதமான சந்தேகங்களுக்கும் இடமின்றி நிரூபணமாகியது அதனையடுத்தே அச்சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் இலக்கம் 2 மேல் நீதிமன்றத்தின் முன்னோடி நீதிபதியான பேராசிரியர் சுமுது பிரேமசந்திர, பிரதிவாதிக்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்தார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »