முல்லைத்தீவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் அவர்கள் தங்கியுள்ள வளாகத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை விலக்கி கொள்ளுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த 33 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை ஆசிரியர் சங்க பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே இந்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.