பிலியந்தல, துன்போவில வடக்க கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட கரதியாவத்த கிராமத்தில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் 418 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.