நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் திரிபு தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் மாதங்களில் டெல்டா திரிபு இலங்கையில் அதிகரிக்கும் அபாயமுள்ளதுடன் முதன்மையான தொற்றாக மாறும் சாத்தியகூறுகள் அதிகமுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய நிலையில் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.