Our Feeds


Monday, July 12, 2021

www.shortnews.lk

ஜனாதிபதியை சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம் - சு.க துணைத்தலைவர்

 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்காக ஸ்ரீ லங்கா  சுதந்திரக்கட்சி காத்துக்கொண்டிருப்பதாக  அக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.


“தற்போதைய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் முக்கியமான ஒரு கட்சியாக  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியே உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்துடன் செயற்படுவது தொடர்பில் நடைமுறை ரீதியான சில பிரச்சினைகள் காணப்படுகின்றன” என்றார்.

இந்த விடயங்கள் தொடர்பாக இறுதியாக நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர் எனத் தெரிவித்த அவர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென சிலர் கூறினார்கள். எனினும் தற்போது நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு உடனடியாக எவ்விதமான முடிவுகளும் எடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார். .

நடைமுறைசார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முதற்கட்டமாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்கே காத்திருக்கின்றோம் என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னம் “கை” என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »