எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இன்று (19) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆளுங்கட்சிக்கு அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.