Our Feeds


Thursday, July 15, 2021

www.shortnews.lk

மண்சரிவு அச்சம் காரணமாக உடனடியாக வௌியேற்றப்பட்ட கிராம மக்கள்!

 



கினிகத்தேனை ரங்ஜுராவ சந்தசிரிகம பிரதேசத்தில் மண்சரிவு அவதான நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் படி 12 வீடுகளை சேர்ந்த 13 பேர் உடனடியாக வௌியேற்றப்பட்டுள்ளனர்.

சந்தசிரிகம கிராமம் கினிகத்தேனை ரங்ஜுராவ மலை உச்சியில் அமைந்துள்ளது.

கடந்த தினங்களில் பெய்த கடும் மழையுடன் குறித்த கிராமத்தில் பாரிய நில விரிசல்கள் மற்றும் வீட்டு சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »