Our Feeds


Wednesday, July 21, 2021

www.shortnews.lk

கொரோனா நான்காவது அலையின் ஆரம்பக் கட்டத்துக்குள் மெதுவாக நுழையும் இலங்கை! - எச்சரிக்கிறது இலங்கை மருத்துவ சங்கம்.

 



(எம்.மனோசித்ரா)


கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலையை நோக்கி இலங்கை சென்று கொண்டிருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சியை அவதானிக்க முடியவில்லை என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

மே மாதத்தில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் அதிகாரிகள் எதிர்பார்த்தபடி கொவிட் -19 தொற்று பரவல் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இது தொற்று பரவலானது கணிசமான குறைப்பை ஏற்படுத்தவில்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.

தற்போதைய கால கட்டத்தில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொவிட் -19 நோயாளிகளின் குறைப்பின் அளவை தீர்மானிக்கிறது. எனினும் கொரோனா வைரஸின் நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி இலங்கை மெதுவாக நுழைகிறது என்று அவர் மேலும் எச்சரித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »