Our Feeds


Sunday, July 25, 2021

www.shortnews.lk

வாகன இலக்கத் தகடுகள் இனி தபாலில் கிடைக்கும்

 



தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதன் முதற்கட்டமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தபால் சேவையின் வருடாந்த வருமானம் 9 பில்லியன்கள் மாத்திரமே கிடைப்பதாகவும் 14 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்,  5 பில்லியன் ரூபாயை திறைசேறிக்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே தபால் சேவையின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே வாகனத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »