தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தபால் சேவையின் வருடாந்த வருமானம் 9 பில்லியன்கள் மாத்திரமே கிடைப்பதாகவும் 14 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், 5 பில்லியன் ரூபாயை திறைசேறிக்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே தபால் சேவையின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே வாகனத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.