கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அலவ்வ பிரதேச சபையின் தவிசாளர் சந்தியா குமார இன்று காலமானார்.
அவர் கடந்த 10 தினங்களாக தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த தினம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அதேநேரம், பிலியந்தலை - கரந்தியான - தும்போவில - 576 ஏ கிராம சேவையாளர் பிரிவில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தபகுதியில் அதிக அளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.