(கந்தளாய் மேலதிக நிருபர்)
பிறந்த சிசு ஒன்றைக் கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் ஒருவரை திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கந்தளாய் பொலிஸார் இன்று (12) தெரிவிக்கின்றனர்.
மத்ரஸா நகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேறு ஒரு நபருடன் உள்ள தகாத உறவு காரணமாக நேற்றிரவு (11) சிசு பிறந்துள்ளதாகவும் பிறந்த சிசுவைக் கொலை செய்து எறித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதனை தெரு நாய்கள் சிசுவைக் கவ்விச் சென்ற நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சிசுவை பிரசவித்தார் எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.