Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

29 பேருடன் பயணித்த ரஷ்ய விமானத்தை காணவில்லை - தேடும் பணிகள் ஆரம்பம்.

 



ரஷ்யாவின் பார் ஈஸ்ட் பிராந்தியத்தில் 29 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பலனா நகருக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. விமான சிப்பந்திகள் 6 பேருடன் 29 பேர் விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் கடலில் விழுந்து இருக்கக்கூடும் எனவும் சில உள்ளூர் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாயமான விமானத்தை தேடும் பணியில் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்படுள்ளன. விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அதில் பயணம் செய்த 29 பேரின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »