ரஷ்யாவில் 28 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகள், அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விமானத்திலிருந்த ஒரு குழந்தை உட்பட அனைவரும் உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ர்யாவின் கிழக்குப் பிராநதியத்திலுள்ள பெட்ரோபவ்லோவ்ஸ் – கம்சாட்ஸ்கி நகரிலிருந்து, கம்செட்கா பிராந்தியத்திலள்ள பலானா நகருக்கு சென்று கொண்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி மாலை 3 மணிக்கு இவ்விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய அவசரநிலை விவகார அமைச்சு தெரிவித்தது.
இவ்விமானத்தின் சிதைவுகள் ஒக்கோட்ஸ் கடற்பகுதியிலம் கரையோரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கம்செட்கா பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இவ்விமானத்தில் பயணித்த எவரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.