Our Feeds


Wednesday, July 21, 2021

www.shortnews.lk

கொரோனா நோயாளிகளில் 20% ஒக்சிஜன் தேவையுடையவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

 



கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளர்களில், சுமார் 20 சதவீதமானோர் பிராணவாயு தேவையுடையவர்களாக உள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை, கொவிட்-19 வைரஸின் நான்காம் அலை உருவாவதற்கான ஆரம்பக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொதுமக்களும், அரசாங்கமும் மிக அவதானத்துடன் செயற்பட்டு, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »