Our Feeds


Wednesday, July 7, 2021

www.shortnews.lk

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயதுச் சிறுமியின் தாயார் மூன்று மாத கர்ப்பிணி - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 



இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட 15 வயதுச் சிறுமியின் தாயாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி குறித்த பெண்ணை 10 இலட்சம் ரூபாய் ரொக்க பிணையில் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் லோசனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பெண் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தனது வசிப்பிடத்தை, குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் முன் உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்று பிறப்பித்தது.

குறித்த பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். தற்போதுள்ள கொரோனா நிலை காரணமாக அவரை பிணையில் விடுவிப்பது தொடர்பாக சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுகளின்படி அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »