15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட போது அவரை பாலியலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரத்து செய்துள்ளது.
அதன் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட 3 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.