Our Feeds


Saturday, July 31, 2021

www.shortnews.lk

இதுவரை கொரோனா தொற்றினால் 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு - 2404 கர்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

 



முதலாவது கொரோனா அலையில் இருந்து இதுவரையான காலப்பகுதியில், 2 ஆயிரத்து 404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.


அதன் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதுவரையில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனைவரும் மூன்றாம் கொவிட் 19 அலையினாலேயே மரணித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலருக்கு அதி உயர் குருதி அலுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் காணப்பட்டது.

அத்துடன், 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களே கொவிட்19 நோயினால் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணியகத்தின் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »