இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கடந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் 11,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி 1,452 பேருக்கும் 18 ஆம் திகதி 1,420 பேருக்கும் மற்றும் 19 ஆம் திகதி 1,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முடக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது பாரிய சிக்கலான விடயம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து 61 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.