(எம்.மனோசித்ரா)
கட்டுநாயக்க – எவரியவத்த பிரதேசத்தில் 1,000 ரூபா போலி நோட்டுக்கள் மற்றும் அதனை அச்சிடப் பயன்படுத்தப்படும் அச்சு இயந்திரம் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கட்டுநாயக்க – எவரியவத்த பிரதேசத்திலுள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்ற நபரொருவர் பொருட் கொள்வனவின் பின்னர் 1, 000 ரூபா பணத்தை வழங்கியுள்ளார். இதன்போது விற்பனை நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் 1, 000 ரூபா நோட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அது போலியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து மேலும் 1000 ரூபா போலி நோட்டுக்கள் 5 கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி – சேதவத்தை பிதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவராவார். மேலும் இவரிடம் காணப்பட்ட பையொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதிலிருந்து போலி நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அச்சு இயந்திரம் கைற்றப்பட்டுள்ளது என்றார்.