நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அவர் நாளை (28) காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஹரின் பெர்ணான்டோ வெளிநாட்டில் இருந்து கடந்த புதன்கிழமை (21) நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.