(எம்.மனோசித்ரா)
சீனாவில் தயாரிக்கப்படும் சினோவெக் தடுப்பூசிக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதையடுத்து, கொவிட் -19 தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் 3 உறுப்பினர்கள் அக்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.
குறித்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தாம் அனுமதி வழங்காதபோதிலும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதன் காரணமாகவே தாம் இந்த விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து விலகுவதாக குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து, வைத்தியர்களான ரஜீவ டி சில்வா, காந்தி நாணயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.