கொவிட்-19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொண்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிசன் வழங்குவதில் சிக்கல் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.