மாதிவெல - பிரகதிபுர பிரதேசத்தில், இந்தியாவின் டெல்டா கொவிட் திரிபு தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டதையடுத்து, அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தெமட்டகொட ஆராமய இடம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய, அதிக வீரியம் கொண்ட டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இலங்கையில் டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனையடுத்து, அப் பிரதேசத்தை தனிமைப்படுத்தி, குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வீரியம் மிக்க டெல்டா திரிபு பரவியுள்ளதாக எனக் கண்டறிய விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.