கொழும்பு மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டிய மற்றும் கொம்பத்தெரு ஆகிய பிரதேசங்களிலேயே புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தையில் 58 பேரும், கொம்பத்தெருவில் 23 பேரும், நாரஹேன்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்றுகாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 318 பேர் இனங்காணப்பட்டனர்.
பம்பலப்பிட்டிய-13 பேர்
மட்டக்குளிய – 36 பேர்
அவிசாவளை- 39 பேர்.
தெமட்டகொட -12 பேர்
கிராண்ட்பாஸ்-11 பேர்
இந்நிலையில், இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த, 24 மணிநேரத்தில், நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,196 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய இலங்கைப் பிரஜைகள் 18 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.