Our Feeds


Tuesday, June 29, 2021

www.shortnews.lk

நாட்டில் கொரோனா மரணங்கள் 3,000 ஐ கடந்தது - மேலும் 45 புதிய மரணங்கள் - உச்சம் தொடும் கொரோனா தாக்கம்

 



நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.


நேற்றைய தினம் (28) நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

24 பெண்களும் மற்றும் 21 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 256,828 ஆக அதிகரித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »