இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,581ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் மூன்றாவது அலையில் மாத்திரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,972ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொவிட்-19 மூன்றாவது அலையில் 1,972 பேர் உயிரிழந்துள்ளனர்.