Our Feeds


Thursday, June 24, 2021

www.shortnews.lk

இன்றும் 03 மாவட்டங்களின் 07 GS பிரிவுகள் உடனடியாக லொக்டவுன் செய்யப்பட்டன.

 



இன்று (24) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


குருணாகலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த 7 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, குருணாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »