சுமார் 300 பேர்களை பலிகொண்ட ஈஸ்டர் தாக்குதல் ஒரு சில குழுக்களின் அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கே மேற்கொள்ளப்பட்டது!
இதற்காக மத அடிப்படை வாதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்!
ஆகவே இந்த நாட்டிலுள்ள அனைவரிடமும் நாம் கருணையோடு வேண்டிக்கொள்வது என்னவென்றால் ஒரு சில குழுக்களின் அரசியல் நலனுக்காக மதத்தையோ, மொழியையோ, இனத்தையோ யாரும் பயன்படுத்த வேண்டாம்.
அரசியலை அதிகாரத்தை ஸ்திரப்படுத்த உயிர்களை கொல்லும் இவ்வாறான செயற்பாடுகளை யாரும் முன்னெடுக்க வேண்டாம்!
ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுத்தூபி ஒன்றை நிறுவி அவர்களை ஆசீர்வதிப்பதற்காக இன்று (18) பொரள்ளையில் உள்ள பொது மயானத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே கார்டினல் மல்கம் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது!