ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ முக்கிய அரசியல் முடிவை விரைவில் நாடாளுமன்றத்தில் வைத்து வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இப்போது தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை வெளிப்படுத்த போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பாக தமது முடிவை செயல்படுத்தப் போவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.