Our Feeds


Sunday, April 18, 2021

www.shortnews.lk

ஹிருனிகாவின் கோரிக்கைக்கு இணங்க கொழும்பு, நீதி மன்ற வளாகத்தில் பாலுட்டும் அறைகள் நிர்மாணம்.

 



கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இரண்டு தாய் பாலூட்டும் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.


வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வதற்காக வருகை தரும் தாய் பாலுட்டும் தாய்மார்கள் பயன்படுத்துவதற்காக நீதி அமைச்சினால் இந்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகத்தில் தாய் பாலூட்டும் நிலையங்களின்மையினால் தனக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி, ஹிருணிகா பிரேமசந்திர உறுமொழி வழங்கியிருந்தார். இதற்கமையவே குறித்த தாய்ப் பாலுட்டும் நிலையங்கள் விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »