Our Feeds


Monday, April 19, 2021

www.shortnews.lk

ஜாமியா நளீமியாவில் அடிப்படைவாதம் கற்பிக்கப்படுவதாக ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு வற்புறுத்துகிறார்கள் - கவிஞர் அஹ்னாப் உயர் நீதி மன்றில் மனு

 



பேருவலை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் கல்வி கற்ற கவிஞரும், ஆசிரியருமான அஹ்னப் உயர் நீதி மன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீரல் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.


16.05.2020 இரவு 08.00 சிலாவத்துறையில் வைத்து தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் அஹ்னாப் கைது செய்யப்பட்டார். இதன் போது அவரது வீட்டிலிருந்து அவர் எழுதிய “நவரசம்” கவிதைத் தொகுப்பு நூலின் 50க்கும் மேற்பட்ட பிரதிகளும் மேலும் சில நூல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்நிலையிலேயே நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் தடுப்புக் காவலில் பெரும்பாலான நேரங்களில் கைவிலங்குடன் வைக்கப்பட்டுள்ளதாகவும், தூங்கச் செல்லும் போதும் கைவிலங்குடனேயே வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேருவலையில் அமைந்துள்ள ஜாமியா நளீமியா கலாபீடத்தில் அடிப்படைவாதம் கற்பிக்கப்படுவதாக ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு அஹ்னாப் சித்தரவதை செய்யப்படுவதாக மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »